- மஹாரதி
1
இரவின் கதவுகளை
அடுத்தடுத்து
திறந்து திறந்து
செல்லச் செல்ல
மிச்சம் இருப்பது
இரவும்
இரவின் மேல்
உறங்கும் இரவும்
***
2
என் மரணத்தைத் தாங்கும்
மனவலிமை உண்டு
என் இறப்பைப்
பொருட்படுத்தாத
எனக்கும்
என் இருப்பைப்
பொருட்படுத்தாத
உனக்கும்.
***
3
உன்னோடு பேசுவதை
நிறுத்தி விட்டபின்
மொழி தன் நாவுகளில்
அலகு குத்திக் கொள்கிறது.
***
